×

வடமாநில மக்களிடம் சிந்தனை மாற்றம் தேவை: தமிமுன் அன்சாரி பேட்டி

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி நேற்று அளித்த பேட்டி: நான்கு மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது. தெலங்கானா தென்னிந்தியாவில் இருப்பதால் அங்கு மக்கள் வேறு முடிவு எடுத்துள்ளனர். இந்தி பேசும் வட மாநிலங்களில் வாழும் மக்களிடம் சிந்தனை மாற்றங்கள் ஏற்படாதவரை, இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படாது.

தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தியின் நடைபயண உழைப்பு வீணாகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த தோல்வி மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி போட்டியிடாமல், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தால் காங்கிரசுக்கு இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது. இவ்வாறு கூறினார்.

The post வடமாநில மக்களிடம் சிந்தனை மாற்றம் தேவை: தமிமுன் அன்சாரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Northern States ,Tamimun Ansari ,Guttalam ,Human Democratic Party ,General Secretary ,Mayiladuthurai District ,
× RELATED வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட்...